20042024Sat
Last update:Thu, 18 Apr 2024

19; திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

President2அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு

உச்ச நீதிமன்றம் வியாக்கியானம்

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக் கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்: இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் நேற்று காலமானார்

12ம் திகதி தேசிய துக்கதினம்

Monk2அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தனது 86 வயதில் நேற்று (08) காலை காலமானார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே நேற்றுக் காலை மஹா நாயக்கர் காலமாகியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் நாயகம் வண. ஆனமடுவ தர்மதஸ்ஸி தேரர் உத்தியோகபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் செயற்பாடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்

திறைசேரி உண்டியல்களை வழங்கி அரசாங்கம் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி ஆட்சேபம் தெரிவிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக வாக்களித்தமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக எடுக்கப்பட்ட செயற்பாடு என்று சபை முதல்வரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.