03072025Thu
Last update:Wed, 04 Jun 2025

வர்த்தகர் சியாம் கொலை வழக்கு நிறைவு

mohamed shiyam court caseபம்பலபிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (12) நிறைவடைந்தது.

முன்னாள் உதவி பொலிஸ் மாஅதிபர் (DIG) வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 6 பேர், சியாமை கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி இதன் தீர்ப்பு அறிவிக்கப்படும் என மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.