16042024Tue
Last update:Mon, 04 Mar 2024

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு: ஆரம்ப நிகழ்வு வவுனியாவில்

வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய விபத்துக்களினாலும் காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்கமுடியாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பராமரிப்பு நிலையம் வவுனியா பம்பைமடு ஆயர்வேத வைத்தியசாலை வளாகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 40 பயனாளிகள் முதற்கட்ட கொடுப்பனவை பெறவுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூகசேவைகள், புனர்வாழ்வு, சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.


யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது என்ற தலைப்பில் சந்திரிகா இம்முறை செல்வா நினைவுப் பேருரை!

Chandrikaயுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' - என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்த நினைவுப் பேருரை இடம்பெறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்பர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் செயலாளர் சி.இரத்தினவடிவேல் மேற்கொண்டு வருகின்றார்.

19 ஆவது திருத்தம் 21, 22இல் விவாதம்

அரசு, எதிர்க்கட்சிகள் இணக்கம் சர்வ கட்சிக்கூட்டத்தில் தீர்மானம்

Parliament19ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை நாளை 21ஆம் திகதியும் மறுநாள் 22ஆம் திகதியும் நடத்துவதென்று அரசாங்கம் உட்பட எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக் கடலில் விபத்து

* இதுவரை 21 சடலங்கள் மீட்பு ; மீட்புப் பணி தீவிரம்

* இலங்கையர் எவரும் இல்லை

சுமார் 700 குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகொன்று மத்திய தரைக் கடலில் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசு இடமளிக்காது

Presidentஅரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.